states

img

மேற்கு வங்கம்: மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அம்மாநிலத்தில், மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் தலா 2 பேரும், பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள் என்றும், அவர்கள் வயல்களில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறியுள்ளார்.